நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,272 பேருக்கு கொரோனா

 
india corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,272  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், கடந்த நில நாட்களாக தினசரி பாதிப்பு குறைந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் 15 ஆயிரத்தை தாண்டியது. நேற்று  15,754 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 36 பேர் இறந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது. 

corona

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 13,900 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்தை தாண்டியுள்ளது. நாட்டில் தற்போது  1,01,166 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு விகிதம் 4.21%ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 13 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 209 கோடியை தாண்டியுள்ளது.