நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 14,092 பேருக்கு கொரோனா

 
india corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.  நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 14,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. நேற்று முன் தினம் இந்தியாவில் 16,561 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல் நேற்று  15,815 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 14,092 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை1,16,861  ஆக குறைந்துள்ளது.

14 august

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 41 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 037 ஆக பதிவாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்தை தாண்டியுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை 28.01 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 207 கோடியாக உயர்ந்துள்ளது.