நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு

 
corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 16,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. நேற்று முன் தினம் இந்தியாவில்  19,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் நேற்று 18,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் 16,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த  எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்தை தாண்டியுள்ளது. அத்துடன் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24மணிநேரத்தில் 41 ஆக பதிவான நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை  5,26,730 ஆக அதிகரித்துள்ளது.

corona

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 15,549 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை  4.34 கோடியாக ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 1,35,510  பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதேபோல் தினசரி பாதிப்பு விகிதம் 6.14 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34.75 லட்சம்  பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 206 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.