நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,299 பேருக்கு கொரோனா பாதிப்பு

 
Corona

இந்தியாவில் நேற்றைவிட தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,299 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று இந்தியாவில்  16, 047 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,299 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 19,431 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் தற்போது 1,25,076 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

11 AUG

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 53 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 879 ஆக பதிவாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  19,431 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 4 கோடியே 35 லட்சத்து 55 ஆயிரத்து 041 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை 25.75 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 207 கோடியாக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 4.58% ஆக உள்ளது.