ஜேஎன்யு பல்கலை. வளாகத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு..

 
ஜேஎன்யு பல்கலை. வளாகத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு..

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜேஎன்யு பல்கலை. வளாகத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு..

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பேர்போனது.  இந்நிலையில் தற்போது இந்த பல்கலைக்கழகத்தின் யமுனா விடுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில்  சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இந்த வனப்பகுதியில் நேற்று மாணவர்கள் நடந்து சென்றபோது துர்நாற்றம் வீசியிருக்கிறது.  இதனையடுத்து அருகில் சென்று பார்த்தபோது அங்கு மரத்தில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது.உடல்

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள்  காவல்துறையினருக்கு தகவல் அளித்திருக்கின்றனர். பின்னர் நிகழ்விடத்திற்கு விரைந்துவந்த அங்கு ஆய்வு செய்ததுடன், குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் வரவழைக்கப்பட்டன. பின்னர் அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் , இறந்துகிடந்தவர்  40 வயதுடைய ஆண் என்பது  தெரியவந்திருக்கிறது.  ஆனால்  அவரது அடையாளங்களும்,  யார் என்கிற விவரங்களும்  தெரியப்படவில்லை.   அத்துடன் உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்  இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  மேலும் யாராவது கொலை செய்து  சடலத்தை இங்கு வந்து தூக்கில் தொங்கவிட்டு சென்றிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.  சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.