நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

 
parliament

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடந்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் கடந்த 7ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 07ம் தேதி முதல் வருகிற 29 தேதி வரை 17 அமர்வுகளாக கூட்டத்தொடர் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதேபோல் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.  ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும், ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கி முடங்குவது வாடிக்கையாகி வந்தது. இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி 29-ந் தேதி வரை நடத்தாமல், 1 வாரம் முன்னதாக வருகிற வெள்ளிக்கிழமையே (இன்றுடன்) முடித்து விட பரிசீலிக்கப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன
 
இந்த நிலையில் அந்த தகவலை உறுதி செய்யும் வகையில், நாடாளுஅன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 29ம் தேதி கூட்டம் நிறைவடைய இருந்த நிலையில், நான்கு நாட்கள் முன்னதாகவே நிறைவுபெற்றுள்ளது. மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.