மோடியை கொல்ல தயாராக இருங்கள் என்று பேசிய ம.பி.காங்கிரஸ் தலைவர் கைது

 
Raja pataria

மோடியை கொல்ல தயாராக இருங்கள் என்று பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜா படேரியா கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்திய பிரதேசம் பன்னா மாவட்டத்தில் உள்ள பாவாய் நகரில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ராஜா படேரியா கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில், மோடியை கொல்ல தயாராக இருங்கள் என்று  ராஜா படேரியா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வீடியோவில் ராஜா படேரியா, மோடி தேர்தலை ஒழித்து விடுவார். மோடி மதம், ஜாதி, மொழி அடிப்படையில் மக்களை பிரிப்பார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் மோடியை கொல்ல தயாராக இருங்கள். அவரை தோற்கடிக்கும் உணர்வில் கொல்லுங்கள் என பேசுவது  தெளிவாக கேட்கிறது.

இதையடுத்து ராஜா படேரியா மீது மத்தியப் பிரதேச காவல் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார்.