ஆந்திர அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டி மாரடைப்பால் உயிரிழப்பு!

 
tn

ஆந்திர தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மேகபதி  கௌதம் ரெட்டி மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 49.

ஆந்திர மாநில தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மேகபதி  கௌதம் ரெட்டி  துபாய் சென்றிருந்தார். ஆந்திராவிற்கான  தொழிற்சாலை திட்டம் குறித்து கடந்த ஒரு வாரமாக துபாயில் முகாமிட்டு பல்வேறு தொழில் அதிபர்களுடன் முதலீடு தொடர்பான கூட்டத்தில் அமைச்சர் மேகபதி  கௌதம் ரெட்டி பங்கேற்றார்.  தொழில் அதிபர்கள் உடனான கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று ஐதராபாத் திரும்பிய  நிலையில் அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ttn

ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு காலை 7:45 மணியளவில் மயங்கிய நிலையில் அழைத்து செல்லப்பட்ட மேகபதி  கௌதம் ரெட்டி மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இருப்பினும் அவருக்கு சிபிஆர்  உள்ளிட்ட முதலுதவிகள் அளிக்கப்பட்ட போதும் எந்த பலனும் அளிக்கவில்லை.

tn

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர்சி கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நம்பிக்கைக்குரியவர். மேகபதி  கௌதம் ரெட்டி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.