நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்..?? - தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ..

 
neet

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகாமை தெரிவித்துளளது.   

ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும்  நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.    இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நாளை வெளியாகும் என்றும்,   அதன்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http:/neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டை  ( ஹால் டிக்கெட்)  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEET EXAM

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.    அந்தவகையில் 2022 - 23 ஆம் கல்வியாண்டுக்கான  இளங்களை  மருத்துவப் படிப்புக்கான  நீட் தேர்வு   வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது.  நாடு முழுவதும் 546  நகரங்களில் நீட் தேர்வு நடைபெற இருக்கிறது.  எம்பிபிஎஸ்,  பிடிஎஸ் படிப்புகளுக்கு தமிழ்,  ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.  நீட் தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து  339 பேர் விண்ணப்பித்துள்ளதாக  தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது. இதில்  கடந்த ஆண்டு விட   கூடுதலாக  2. 57   லட்சம் பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருக்கின்றனர்.

NEET

 இவர்களில் 10 லட்சத்து 64 ஆயிரத்து 606  பேர் பெண்கள்  ஆவர்.  8 லட்சத்து 7 ஆயிரத்து 711  ஆண்டுகளும்  ,  மூன்றாம்  பாலினத்தவர்கள் 12 பேரும் அடங்குவர்.    அதில்   தமிழகத்தில் இருந்து மட்டும் 1,42,286  பேர் விண்ணப்பித்துள்ள நிலையில்,   31,803 பேர் தமிழ் மொழியில் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நீட் தேர்வு நடைபெற இன்னும்  7 நாட்களே உள்ள நிலையில் இதற்கான  ஹால் டிக்கெட் நாளை இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.   தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சீட்டு மூலம் மாணவர்கள் தேர்வு மையங்கள், இடம் தொடர்பான விவரங்களை  அறிந்துகொள்ள முடியும்.  இப்போது நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் தொடர்பான விவரங்களை இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அந்தந்த தேர்வு மையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது..