புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி

 
rss

புதுச்சேரியில் நாளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்தும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் நாளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்தும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர் . காமராஜர் சாலையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டு , கடலூர் சாலையில் உள்ள சிங்கார வேலர் சிலை அமைந்துள்ள இடத்தில் நிறைவடைகிறது. மேலும் இந்த ஊர்வலம் அமைதியாக நடைபெற கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் தமிழகத்திலும் காந்தி ஜெயந்தி அன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், அக்டோபர் 2ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6ம் தேதி பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடதக்கது