அமலாக்கத்துறை அதிரடி! ராகுல் காந்தி நாளையும் ஆஜராக சம்மன்

 
rahul gandhi

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் கடந்த 3 நாட்களாக அமலக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில்,  நாளையும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
 
மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவியது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. இந்த பத்திரிக்கையின் பங்குகளை ,   சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் உள்ள பங்குதாரர்களின் ஒப்புதலை  பெறாமல் மாற்றப்பட்டதாக புகார் எழுந்து. இதனையடுத்து  சோனிய மற்றும் ராகுல் காந்தி மீது  பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி,   டெல்லி  உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை தற்போது  அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜூன் 8ம் தேதியும், , முன்னாள் காங்கிரஸ் தலைவரும்,  மக்களவை தலைவருமான ராகுல் காந்தி ஜூன் 2ம் ஆம் தேதியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.  சோனியா காந்திக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால் வருகிற 23ம் தேதி அஜராக உத்தரவிடப்பட்டது. இதேபோல் ராகுல் வெளிநாட்டில் இருந்ததால் வேறு தேதியில் ஆஜராவதாக அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி  ஜூன் 13 ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. 

rahul

இதனை தொடர்ந்து ராகுல் காந்தி கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.  ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் அந்தஸ்திலான அதிகாரிகள் விசாரணை நடத்தி நடத்தினர்.  விசாரணையில் யங் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்ட விதம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை இயங்கிய விதம், காங்கிரஸ் கட்சி கொடுத்த நன்கொடை பங்குகள் மற்றும் யங் இந்தியா தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. யங்  இந்தியா நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக சொல்லப்படுவது பற்றி இந்த விசாரணை அமைந்திருக்கிறது. கடந்த 3 நாட்களாக பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நாளையும் விசாரணைக்கு ஆஜர் ஆகும் படி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.