காதலை ஏற்க மறுப்பு.. +2 மாணவியை எரித்துக் கொன்ற இளைஞர்..

 
காதலை ஏற்க மறுப்பு.. +2 மாணவியை எரித்துக் கொன்ற இளைஞர்..


 ஜார்க்கண்டில் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் உயிருடன் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலை ஏற்க மறுப்பு.. +2 மாணவியை எரித்துக் கொன்ற இளைஞர்..

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் 12ம் வகுப்பு படித்து வந்தவர் அங்கிதா குமாரி என்கிற மாணவி.  இவரை அதே  பகுதியைச் சேர்ந்த ஷாருக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.  ஆனால் இவரது காதலை மாணவி ஏற்க மறுத்துள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த ஷாருக்  கடந்த 23 ஆம் தேதி  மாணவி மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் மாணவி அலறித்துடித்த மாணவியை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடல் கருகிய நிலையில்  மருத்துவமனையில் அனுமதித்தனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  

சென்னையில்  சிசிடிவி-யிடம் கொஞ்சி பேசிய இளைஞர்.கஞ்சா போதையில் அட்டகாசம்

இதனையடுத்து மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ,  சம்பந்தப்பட்ட இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தும்ஷா நகரில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர்  மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஷாருக்கை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவி வருவதால் அங்கு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.