மக்கள் மருத்தகங்களின் எண்ணிக்கையை 9,000 ஆக உயர்வு - மத்திய அரசு முடிவு.

 
மக்கள் மருத்தகங்களின் எண்ணிக்கையை 9,000 ஆக உயர்வு - மத்திய அரசு முடிவு.


நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 9 ஆயிரமாக உயர்த்த  மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிரதமர் மலிவு விலை மருந்துகள் திட்டம் கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2017ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 3,000 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தம் 6,000 மக்கள் மருந்தக விற்பனை நிலையங்கள் என்ற இலக்கு எட்டப்பட்டது.

மத்திய அரசு

கடந்த நிதியாண்டில் மக்கள் மருந்தக விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 8,610 ஆக இருந்தது. தற்போது அது 9,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த மருந்தகங்களில் 1,759 மருந்துகள் மற்றும் 280 அறுவை சிகிச்சை சாதனங்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளின் விலை, பிற மருந்து கடைகளை ஒப்பிடும் போது இந்த மருந்தகங்களில் அதிகபட்சமாக 90 சதவீதம் வரை குறைவாக விற்கப்படுகிறது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு சுமார் ரூ.5,300 கோடி ரூபாய் அளவிற்கு மருத்துவ செலவு குறைந்துள்ளது. மேலும் பிரதமரின் மலிவு விலை மருந்து திட்டம், வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகள், தீவுப் பகுதிகள் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களிலும் மக்கள் மருந்தகம் திறக்கப்படுவதற்கும், பெண் தொழில் முனைவோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கும் உதவி வருகிறது. ” என்று குறிப்பிடப்பட்டுள்
ளது.