சூட்கேஸில் கிடைத்த மனித உடல் பாகங்கள்.. ஷ்ரத்தாவின் உடல் பாகமா அவை?? - போலீஸார் தீவிர விசாரணை..

 
சூட்கேஸில் உடல் பாகங்கள்

ஹரியானாவில் சூட்கேஸில் மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து ,  அது டெல்லியில் காதலனால் கொல்லப்பட்ட  ஷ்ரதா  வால்கரின் உடலாக என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

மும்பை அடுத்த வசாயை சேர்ந்த இளம் பெண் ஷ்ரத்தாவை , அவரது காதலன் அப்தாப் அமீன் படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும்  பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது.  ஷ்ரத்தாவை  கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன் 35 துண்டுகளாக உடலை வெட்டி , வெவ்வேறு இடங்களில் வீசியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்தார்.  இதனை அடுத்து அப்தாப் அமீனை  கைது செய்த போலீசார்,  அவர் ஷ்ரத்தாவின்  உடலை வீசி இடங்களுக்கு அழைத்துச் சென்று உடல் பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டு வனப்பகுதியில் மனித உடல் எசங்களுடன்  சூட்கேஸ் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.

சூட்கேஸில் கிடைத்த மனித உடல் பாகங்கள்.. ஷ்ரத்தாவின் உடல் பாகமா அவை?? - போலீஸார் தீவிர விசாரணை..

 இதனை அடுத்து ஃபரிதாபாத் போலீஸார்,  டெல்லி காவல்துறையினர் தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.  அவர்கள் தெரிவித்துள்ள தகவலின் படி,  மனித உடல் பாகங்கள்  ஒரு பிளாஸ்டிக் பை  மற்றும் ஒரு சாக்கில் சுற்றப்பட்டு சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.  சூட்கேஸ் அருகில் ஆடைகள் மற்றும் பெல்ட் போன்றவையும் மீட்கப்பட்டுள்ளன.  மேலும், கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் சில மாதங்கள் பழமையானதாக தெரிவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  ஆனால் அவை ஆணின் உடலா  அல்லது பெண்ணுடைய உடலா என்பது தெளிவாக தெரியவில்லை என்றும்,   சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,  பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரம் தெரியவரும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.