மனைவியை ரயிலுக்குள் தள்ளி கொலை செய்த கொடூர கணவன்

 
Maharastra

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் மனைவியை தரத்தரவென இழுத்து ரயிலுக்குள் தள்ளி கொலை செய்த கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசை ரோடு ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளுடன் தங்கியுள்ளனர். இதனிடையே கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பயங்கர சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அனைவரும் அங்குள்ள பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் தூக்கத்தில் இருந்து விழித்த கணவன் திடீரென மனைவியை தரத்தரவென இழுத்து வந்து ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் வீசியிருக்கிறார். இந்நிலையில் அந்த வழியாக அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மனைவி உயிரிழந்ததை அறிந்த கணவர் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு உடனடியாக அங்கிருந்து தலைமறைவானார். அந்த நபர் தாடர் மற்றும் கல்யாண் ஆகிய ரயில் நிலையங்களில் தென்பட்டதாகவும் அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மனைவியை கொன்ற அந்த கணவர் மீது 302 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். கணவர் மனவியை ரயில்முன் தள்ளி கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.