கணவருடன் முன்னாள் காதலியை சேர்த்து வைத்த மனைவி.. ஆந்திராவில் ருசிகரம்..

 
marriage

கணவரின் முன்னாள் காதலியை தேடிச்சென்று அவரை தன் கணவருக்கே திருமணம் செய்து வைத்த மனைவியின்  செயல் திருப்பதியில் நிகழ்ந்துள்ளது.

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாண்.  டிக் டாக் பிரபலமான இவர்  கடப்பாவை சேர்ந்த விமலா என்கிற பெண்ணை காதலித்து  திருமணம் செய்துள்ளார்.  இவர்கள் இருவரும்  டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தனது கணவர்  திருமணத்திற்கு முன்பாக வேறொரு பெண்ணை காதலித்தது  விமலாவுக்கு தெரியவந்துள்ளது. விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்த அவர்,  அந்தக் காதலை மறந்து விட்டு தன்னை திருமணம் செய்து கொண்டதையும்  அறிந்துள்ளார்.  

 ஆந்திரா திருமணம்

இதனையடுத்து கணவரின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த  விமலா,  கணவரின் முன்னாள் காதலியை  தேடிச்சென்றார்.  அதன்படி நித்யாஸ்ரீயை தேடிக் கண்டுபிடித்த அவர், அவரை தன் கணவருக்கே  இரண்டாவதா திருமணம் செய்து வைத்திருக்கிறார்.  3 பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தையும் எழுதி வாங்கிக் கொண்ட  விமலா,  கணவர் மற்றும் அவரின் காதலியுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை  எடுத்து அதையும் பகிர்ந்திருக்கிறார்.