நான் ஆம்பளைங்கள அடிப்பேன்..எனக்கு திருமணம் ஆகாததற்கு இதுதான் காரணம் - கங்கனா ரணாவத்

 
க்

எனக்கு இதுவரைக்கும் திருமணம் ஆகாததற்கு இதுதான் காரணம் என்று பிரபல நடிகை கங்கனா ரணாவத் மனம் திறந்து இருக்கிறார். கங்கனா என்றாலே சர்ச்சை, கங்கனா என்றாலே டெரர் லேடி என்று அவரது பேச்சினாலும், அவரது கருத்துகளாலும்  அப்படி ஒரு பிம்பம் இருக்கிறது.  இந்த பிம்பம் வதந்திகளால் உருவாகி இருக்கிறது என்கிறார்.

 ரஜ்னீஸ் காய் இயக்கத்தில் கங்கனா ரணாவத்  நடித்த தாகத் திரைப்படம் வரும் இருபதாம் தேதி வெளியாகிறது.   இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.   இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கங்கனா,   சமஸ்கிருதம் தான் கன்னடம், இந்தி, தமிழ் மொழிகளை விட பழமையானது.  சமஸ்கிருதத்திலிருந்து கூட பல மொழிகள் உருவாகி இருக்கலாம் . ஆகவே சமஸ்கிருதம் ஏன் நாட்டின் தேசியமொழியாக இருக்கக் கூடாது என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

க்க்

 தாகப் படத்தின் ப்ரோமோசனுக்காக ராஜஸ்தான் சென்றிருந்த கங்கனாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,   எப்போது ராஜஸ்தானை பொறுத்த வரைக்கும் கலவரங்கள் நடைபெறுகின்றன.   இதை கட்டுப்படுத்தும் அரசுகளை கொண்டு வாருங்கள்.  இல்லை எனில் நாங்கள் புல்டோசர்களை அனுப்புவோம் என்று சொல்லி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ஞ்

 இப்படி அவ்வப்போது சினிமாவிலும் அரசியலிலும் அதிரடியான கருத்துக்களை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி வரும் கங்கனா தனக்கு ஏன் இன்னமும் திருமணம் நடைபெறவில்லை என்பது குறித்து தெரிவித்திருக்கிறார்.   தாகத் படத்தில் வரக்கூடிய அக்கினி கேரக்டரும் உங்களது ரியல் லைஃப் கேரக்டரும் ஒன்னா என்ற கேள்விக்கு,     அப்படி இல்லை..ரியல் லைப்பில்  நான் யாரையும் அப்படி அடிக்க முடியும்.   எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே. எனக்கு இதுவரைக்கும் திருமணம் நடக்காமல் இருப்பதற்கு காரணம் என்னை பற்றி பரவும் வதந்திகள் தான் .  ஆமாம் ,  நான் ஆம்பளைங்கள அடிப்பேன் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று தெரிவித்திருக்கிறார்.