மாலையுடன் காத்திருந்த பெண் - தாலிகட்ட வராத எம்.எல்.ஏ

 
so

 தன்னைக் காதலித்து சேர்ந்து வாழ்ந்து விட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக இளம்பெண் போலீசில்  கண்ணீருடன் புகார் அளிக்க எம்.எல்.ஏ.  பிஜய் சங்கர் தாஸ்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

bi

 ஒடிசா மாநிலத்தில் திர்டோல் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சங்கரதாஸ்.   30 வயதான இவர், சோனாலிகா என்கிற பெண்ணை காதலித்து அவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்.   திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார் .  

இந்நிலையில் தற்போது இருவரும் பதிவு செய்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து கடந்த மே 14-ஆம் தேதி என்று முன்பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அதன்படியே அந்த பெண் ஜூன் 17ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக உண்மையிலேயே விஜய் சங்கரதாஸ் சொன்னதாகவும் கூறப்படுகிறது.  இதனால் அந்த பெண் மணப்பெண் கோலத்தில் நேற்று முன்தினம் திருமண பதிவு அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் வந்து காத்திருந்திருக்கிறார்.   ஆனால் அந்த பெண்ணை பதிவு திருமணம் செய்து கொள்ள கடைசி வரைக்கும் விஜய் சங்கர் தாஸ் வராமல் இருந்திருக்கிறார்.

so

இதையடுத்து எம்எல்ஏ விஜய் சங்கர் தாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் எம்எல்ஏ விஜய் சங்கர் தாஸ் அளித்துள்ள விளக்கத்தில்,   பதிவு திருமணம் செய்து கொள்ள இன்னும் 60 நாட்கள் உள்ளன.   நான் திருமணத்தை நிறுத்த முயற்சிக்க வில்லை. அதுமட்டுமல்லாமல் பதிவுத் திருமணம்  தொடர்பாக மணப்பெண்ணும் அவரது குடும்பத்தினர் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை என்று சமாளித்திருக்கிறார்.  தொடர்ந்து போலீசார் விசாரணை நடந்து வருகிறது.