சகோதரிகள் மீது ஆசிட் வீச்சு -ஒருவர் கவலைக்கிடம் : இளைஞரின் பெயரை வெளியிடாத போலீஸ்
சகோதரிகள் மீது ஆசிட் வீசியதில் ஒருவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். ஆனால் அந்த இளைஞனின் பெயரை போலீசார் வெளியிடாமல் உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பஹ்பட் மாவட்டம் ரோஷகர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இக்கிராமத்தில் தரன்மும், மண்டஷா என்ற இரண்டு சகோதரிகள். இதில் 16 வயதான தரன்முமை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு தரன்மும் சம்மதம் தெரிவிக்காததால் அந்த இளைஞர் தரன்முமை துரத்தி துரத்தி வந்து தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.
இதனால் அந்த இளைஞரை கண்டபடி திட்டி வந்திருக்கிறார் தரன்மும். இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த இளைஞர் தரன்மும் தந்தை இரவு வேலைக்கு சென்ற நேரம் பார்த்து வீட்டிற்குள் சென்றிருக்கிறார். அப்போது சகோதரிகள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திக்கிறார்கள்.
வீட்டிற்குள் நுழைந்த அந்த இளைஞன் தான் எடுத்து சென்று இருந்த ஆசிட்டை தூங்கிக்கொண்டிருந்த தரன்மும், மண்டஷ்சா இருவரின் முகத்திலும் வீசி விட்டு தப்பி ஓடி விட்டார்கள். ஆசிட் வீசப்பட்டதில் சகோதரிகள் இருவரும் அலறி துடித்தனர் .
இரவில் சகோதரிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்திருக்கிறார்கள். ஆசிட் வீச்சில் துடி துடித்துக்கொண்டிருந்த சகோதரிகள் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சகோதரிகள் இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தரன்முமின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்திருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சகோதரிகள் மீது ஆசிட் வீசி விட்டு தப்பிச் சென்ற இளைஞனை கைது செய்துவிட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலை காதலால் சகோதரிகள் மீது ஆசிட் வீசியதை அந்த இளைஞனும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், அந்த இளைஞரின் பெயரை இதுவரைக்கும் போலீசார் வெளியிடாமல் உள்ளார்கள்.