நடிகர் சுதீப் ஆபாச வீடியோக்கள்- கர்நாடக பரபரப்பு
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரம் இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட காங்கிரசும் முனைப்பு காட்டி வருகிறது. பாஜக நடிகர்களை தனது பக்கம் இழுத்து பிரச்சாரத்தை பலப்படுத்தி வருகிறது. கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வரும் சுதீப்பை பிரச்சாரத்திற்கு பாஜக தன் பக்கம் இழுத்திருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க நடிகர் சுதீப் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல் பரவுகின்றன . ஆனால் எந்த கட்சியிலும் இணையவில்லை . பாஜகவுக்கு பிரச்சாரம் மட்டும் செய்வேன் என்று சொல்லி இருக்கிறார் சுதீப். அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து கூட்டாக பேட்டியும் அளித்திருக்கிறார் சுதீப்.
இந்த நிலையில் பெங்களூருவில் இருக்கும் நடிகர் சுதீப் வீட்டுக்கு இரண்டு கடிதங்கள் வந்துள்ளன. அந்த கடிதங்களில் நடிகர் சுதீப் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக சொல்லி மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளார்கள். தகாத வார்த்தையிலும் சுதீப்பை மர்ம நபர்கள் திட்டியிருக்கிறார்கள். இதனால் சுதீப் , அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீ எத்தனை பெண்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி இருக்கிறாய், இதற்கு முடிவு கட்டும் விதமாக ஆபாச வீடியோக்கள் வெளியிடப்படும். துபாய் , கடலோர மாவட்டத்தில் உள்ள ஓட்டங்கள், சென்னை , பஞ்சாப் ஆகிய பகுதிகளில் நடந்த ஆபாச வீடியோக்கள் வெளியிடப்படும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த கடிதங்களை எழுதி அனுப்பி வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்தார்கள் என்பது பற்றி புட்டேனஹள்ளி போலீசில் சுதீப்பின் மேலாளர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை பிடிக்க தேடி வருகின்றனர். மர்ம நபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டிருக்கிறது .
இது குறித்த நடிகர் சுதீப், எனக்கு மிரட்டல் விடுத்து இரண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மிரட்டல்களுக்கு நான் பயப்படக்கூடிய நபர் இல்லை. எனக்கு யார் மிரட்டல் விடுத்தார்கள் என்பது தெரியும். அவர்களைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை . இந்த விவகாரத்தை நான் சும்மா விடமாட்டேன். இதற்கு தக்க பதில் கொடுப்பேன். ஏனென்றால் மற்றவர்களுக்கு இது பாடமாக அமைய வேண்டும் என்று அதிரடி காட்டி இருக்கிறார்.