ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்று வட்டபாதையின் உயரம் அதிகரிப்பு!

 
aditya L1

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்று வட்டபாதையின் உயரம் முதல் முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவவுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம்  ஆதித்யா விண்கல விண்ணில் ஏவப்பட்டது.  , ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். இந்த நிலையில்ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.  இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.  100-120 நாட்கள் பயணித்து ஆதித்யா L1 விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  


இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்று வட்டபாதையின் உயரம் முதல் முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 245km x 22,459 km என்ற சுற்றுவட்டப்பாதையில் தற்போது ஆதித்யா விண்கலம் சுற்றி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதேபோல் ஆதித்யா எல்1 விண்கலத்தை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் பணி வருகிற 05ம் தேதி மேற்கொள்ளப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.