வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஆதித்யா L1 விண்கலம்!

 
aditya l1

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆதித்யா எல்.1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவவுள்ளது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.  100-120 நாட்கள் பயணித்து ஆதித்யா L1 விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆதித்யா எல் 1 விண்கலத்தின் கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது. சரியாக முற்பகல் 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்டவுன் தொடங்கியது. 


இந்த நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம்  ஆதித்யா விண்கல விண்ணில் ஏவப்பட்டது. விண்கலத்தை வெற்றிகாரமாக விண்ணில் ஏவியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.