விமான விபத்தில் முன்னாள் முதல்வர் படுகாயம்
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 குழந்தைகள் உட்பட 242 பேர் உடல் கருகி பலியாகின. விமானம் புறப்பட்ட 3 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. 3,000 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமான விபத்துக்குள்ளான பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் சென்ற விமானம் அங்கே தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், மருத்துவக்குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றன.


