சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது ஆந்திர உயர்நீதிமன்றம்

 
Chandrababu Naidu proposes to establish a music university and a national award in commemoration of SPB

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம்  இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 
 

Chandrababu Naidu

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது 317 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி சந்திரபாபு நாயுடுவை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.  இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே  ஊழல் வழக்க ரத்து செய்ய கோரியும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சந்திரபாபு தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. 

Chandrababu Naidu

இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது அம்மாநில உயர்நீதிமன்றம். திறன்மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவ காரணங்களின் அடிப்படையில் 4 வாரகாலத்திற்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.