அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா தொடக்கம்!

 
modi

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது. ராமர் கோவிலில் நடைபெற்று வரும் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பெரிய தட்டில் பூஜை பொருட்களுடன் வந்த பிரதமர் மோடி, பிராண பிரதிஷ்டை பூஜையில் அமர்ந்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். மைசூரை அடிப்படையாகக் கொண்ட ஸ்தபதி (சிற்பி) அருண் யோகிராஜ் வடிவமைத்த ஸ்ரீராமர் சிலைதான் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், துறவிகள், பிரபலங்கள் என நாடு முழுவதும் 7000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ram


 
அயோத்தி  ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு அயோத்தி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு 11,000 ‘சிசிடிவி’ கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எஸ்பிஜி, என்எஸ்ஜி , தீவிரவாத தடுப்புப் படை, சிறப்பு கமாண்டோ படை, சிஆர்பிஎப், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மாநில போலீஸார் உட்பட மொத்தம் 30,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.