பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா...இந்தியா கூட்டணியில் விரிசல்!

 
Nitish kumar

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அம்மாநில ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கினார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த கூட்டணியில் ஏற்பட்ட உரசல் காரணமாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் மீண்டும் கைக்கோர்க்க விரும்பினார். இதற்காக அவர் பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சில நிபந்தனைகளுடன் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அம்மாநில ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கினார். முன்னதாக ஜே.டி.யு.கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரிம் நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் சில மணி நேரங்களில் பாஜகவின் ஆதரவுடன் அவர் மீண்டும் பிகார் முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.