பீகார் தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கிறது- ராகுல்காந்தி

 
Rahul Gandhi speaking about adani Rahul Gandhi speaking about adani

பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற தேர்தலில் நாம் வெற்றி பெறத் தவறிவிட்டோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

No Celebration Is Worth A Human Life": Rahul Gandhi On Bengaluru Stampede

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, “பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற தேர்தலில் நாம் வெற்றி பெறத் தவறிவிட்டோம். மகா கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டம் தொடரும்.  காங்கிரஸ் கட்சியும் இந்திய கூட்டணியும் இந்த முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.