நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்!

 
Protest

ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தவறிய காங்கிரஸ் அரசை கண்டித்து அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்திற்கும், மெய்தி இனத்திற்கும் கடந்த மே மாதம் முதல் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த மோதல் போக்கு வன்முறையாக மாறி அந்த மாநிலத்தையே சீரழித்து வருகிறது. குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி, நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டு நாட்களும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. 

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக பாஜக எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தவறிய காங்கிரஸ் அரசை கண்டித்து அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி நிலை முன்பு பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் அரசுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.