மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், பெண்களுக்கு நடந்த கொடூரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் கடந்த 7 நாட்களாக முடங்கியது. இந்த நிலையில், இன்று 7வது நாளாக கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அவைகளும் தொடங்கிய சிறிதி நேரத்திலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்கம் போல் அமளியில் ஈடுபட தொடங்கினர். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம். பிர்லா அறிவித்தார்.