எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி - நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

 
parliament

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் கடந்த 12 நாட்களாக முடங்கியது.  

இதனிடையே இன்று 13 வது நாளாக இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கியது. அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.