திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்- தமிழர்களை கெளரவித்த சந்திரபாபு நாயுடு
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவின் தலைவராக பி.ஆர்.நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் 24 உறுப்பினர்களைக் கொண்ட பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து பி. ராம்மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி பெயர்களும், தெலங்கானா மாநிலத்தில் இருந்து ஜாஸ்தி பூர்ணா சாம்பசிவராவ், மகேந்தர் ரெட்டி, அனுகோலு ரங்கஸ்ரீ, புரகாபு ஆனந்தசாய், சுசித்ரா எல்லா, கர்நாடகாவில் இருந்து ஆர்.என். தர்ஷன், நீதிபதி எச்.எல்.தத், நரேஷ் குமார் ஆகியோரும் டாக்டர். ஆதித் தேசாய் (குஜராத்), ஸ்ரீசௌரப் எச் போரா (மகாராஷ்டிரா மாநிலத்தின் சார்பில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் இருந்து ஜக்கம்பேட்டை எம்.எல்.ஏ. ஜோதுலா நேரு, கோவூர் எம்.எல்.ஏ வெமிரெட்டி பிரசாந்தி ரெட்டி,மடகசீரா எம்.எல்.ஏ. எம்.எஸ்.ராஜூ, முன்னாள் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமி, நர்சிரெட்டி, நன்னப்பனேனி சதாசிவ ராவ், கோட்டேஸ்வர ராவ், மல்லேல ராஜசேகர் கவுட், ஜங்கா கிருஷ்ணமூர்த்தி, சாந்தாராம், ஜானகி தேவி தம்மிஷெட்டி என மொத்தம் 24 பேர் கொண்ட அறங்காவலர் குழு நியமித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமித்துள்ளார்.


