#Breaking: மே 10ல் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்..

 
#Breaking: மே 10ல் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்..


 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக  வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுமென்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடகவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசின் பதவிக்காலம் மே மாதம் 24 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 224 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.  டெல்லியில் தேர்தல் ஆணையர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.   224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் மொத்தம்  5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

#Breaking: மே 10ல் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்..

 2.62 கோடி ஆண்  வாக்காளர்கள் மற்றும்  2. 59 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 41,312 பேர் உள்ளனர்.  கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக ஒன்பது லட்சம் பேர் 17,241 பேர் வாக்களிக்க உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில்,  கர்நாடக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே 24 ஆம் தேதி நிறைவடைவதை அடுத்து தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  அரசின் ஆயுட் காலம் முடியும் மே 24 ஆம் தேதிக்கு முன்னர் தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். 

election commision

 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக  வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுமென்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13ம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 21ம் தேதி  நடைபெறும் எனவும், மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஏப்ரல் 24 என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.