சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரனை
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு மீதான விசாரனை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது 317 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி சந்திரபாபு நாயுடுவை ஆந்திர போலீசார் கைது செய்தனர். சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடரந்து சந்திரபாபு நாயுடு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே ஊழல் வழக்க ரத்து செய்ய கோரியும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சந்திரபாபு தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், வழக்கை ரத்து செய்ய கோரி சந்திரபாபு நாயுடு செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பைபர் நெட் ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமின் தர மறுத்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் தன் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய கோரியும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.