சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரனை
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு மீதான விசாரனை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது 317 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி சந்திரபாபு நாயுடுவை ஆந்திர போலீசார் கைது செய்தனர். சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடரந்து சந்திரபாபு நாயுடு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே ஊழல் வழக்க ரத்து செய்ய கோரியும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சந்திரபாபு தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு மீதான விசாரனை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. திறன் மேம்பாட்டு முறைகேடு தொடர்பாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்து இருந்தார். நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.