சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பின்னடைவு!

 
bubesh

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தான் போட்டியிட்ட தொகுதியில் தொடர் பின்னடைவை சந்தித்துள்ளார். 

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், மிசோரம் மாநிலத்தை தவிற மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

voting

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களையும் தாண்டி முன்னிலை வகித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பி.ஆர்.எஸ்.39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. இதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்கவுள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், 
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தான் போட்டியிட்ட தொகுதியில் தொடர் பின்னடைவை சந்தித்துள்ளார். அவர் தான் போட்டியிட்ட பதான் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜய் பாகேல் 5375 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.