சத்தீஷ்கர் முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பின் போது உள்ளே புகுந்த பாம்பு - அதிர்ச்சி வீடியோ!

 
சத்தீஷ்கர்

சத்தீஷ்கரில் முதலமைச்சர் பூபேஷ் பாகல் செய்தியாளர் சந்திப்பின் போது பாம்பு ஒன்று உள்ளே புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசிக்கொண்டிருந்த போது திடிரென அங்கு ஒரு பாம்பு ஒன்று வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், முதலமைச்சர் பூபேஷ் பாகல் சற்றும் பதறாமல் நின்றார். மேலும் கூட்டத்திற்குள் அந்த பாம்பை யாரும் அடிக்க வேண்டாம் அது செல்லட்டும் என கூறினார். இதனையடுத்து சிறிது நேரத்தில் அந்த பாம்பு அங்கிருந்து சென்றது. 


செய்தியாளரின் சந்திப்பின் போது பாம்பு உள்ளே புகுந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கூட்டத்திற்குள் பாம்பு நுழைந்தும் சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் பயப்படாமல் அசால்டாக இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.