ரூ.20 கோடி தரவில்லையென்றால் கொன்றுவிடுவோம்....முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!

 
mukesh ambani

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி. இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பல்வேறு தொழில்நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவரது மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று மர்ம நபர் ஒருவரிடம் இருந்து மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் நிங்கள் எங்களுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களை கொன்று விடுவோம். எங்களிடம் இந்தியாவில் உள்ள திறமையான துப்பாக்கிச் சுடுபவர்கள் உள்ளனர். எனவே கேட்ட பணத்தை கொடுத்துவிடுங்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

Mukesh Ambani

இந்த நிலையில், கொலை மிரட்டல் தொடர்பாக முகேஷ் அம்பானி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள மும்பையின் காம்தேவி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை மிரட்டல் விடுத்த நபர் ஷதாப் கான் என்பது தெரியவந்துள்ளது. முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.