சங்கத் தலைவர் சஸ்பெண்ட்.. எய்ம்ஸ் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..

 
சங்கத் தலைவர் சஸ்பெண்ட்.. எய்ம்ஸ் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..


 டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் சங்க தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மருத்துவமனை செவிலியர்கள் அனைவரும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

சங்கத் தலைவர் சஸ்பெண்ட்.. எய்ம்ஸ் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை உட்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து செவிலியர்கள் கடந்த சனிக்கிழமை அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  செவிலியர் சங்கத் தலைவர் ஹரிஷ்குமார் கஜ்லா தலைமையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றதாக தெரிகிறது.   இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தற்காகவும்,  மருத்துவர்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட புகாரின்பேரில்  செவிலியர் சங்க தலைவர்  ஹரிஷ் குமார் கஜ்லாம்,  மருத்துவமனை நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  

சங்கத் தலைவர் சஸ்பெண்ட்.. எய்ம்ஸ் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..

இந்நிலையில் செவிலியர் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டதைக்  கண்டித்து செவிலியர்கள் அனைவரும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.   ஹரிஷ் குமார் கஜ்லாவுக்கு விதிக்கப்பட்ட  பணியிடை நீக்க உத்தரவை  உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென செவிலியர்கள் சங்கத்தினர்  வலியுறுத்தியுள்ளனர்.