தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார்...
தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பிரபல செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயர் (71) காலமானார்!
தேசிய ஒளிபரப்பு ஊடகமான தூர்தர்ஷனில் இந்தியாவின் முதல் ஆங்கில செய்தி தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் கீதாஞ்சலி ஐயர். 70 வயதான அவர் பார்கின்சன் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிய கீதாஞ்சலி, திடீரென சரிந்து விழுந்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் கீதாஞ்சலியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவின் லொரேட்டோ கல்லூரியில் பட்டம் பெற்ற கீதாஞ்சலி ஐயர் 1971-ல் தூர்தர்ஷனில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். இந்தியாவின் முதல் ஆங்கில செய்தி தொகுப்பாளர் என்கிற பெருமையை பெற்றவர் . நான்கு முறை சிறந்த தொகுப்பாளர் என்ற விருது பெற்றிருக்கிறார். 1989-ல் சிறந்த பெண்களுக்கான இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதையும் வென்றுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.