இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் - விரைந்த போர்க்கப்பல்

 
tn

இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவை நோக்கி கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், அந்த கப்பலின் அருகே வந்த மர்ம ட்ரோன் ஒன்று இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்  என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல்  கப்பலில் இருப்பவர்களை மீட்க கடலோர காவல் படையின் விக்ரம் கப்பல் விரைந்துள்ளது. கச்சா எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். பாதுகாப்புத் துறை  கச்சா எண்ணெய் கப்பலை நோக்கி போர்க்கப்பலும் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.