அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம்!

 
earth

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்திய அரசின் தீவுகளில் ஒன்றான அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக பதிவானதாக தேசிய புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமான இன்று அதிகாலை சரியாக 4.17 மணி அளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்தமான் தீவுகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குழுங்கின.

திடீர் நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அந்தமான் நிகோபர் தீவுகளில் அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.