ஜம்மு-காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!

 
earth

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5.2 ஆக பதிவாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சரியாக இன்று காலை 8.36 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 129 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேஎலும் இந்த நிலநடுக்கம் அட்ச ரேகை 73.32 ஆகவும், தீர்க்க ரேகை 184 ஆகவும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 

இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அம்மாநில மக்கள் பதற்றம் அடைந்தனர். இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.