மாஜி எம்பிக்கு ஆயுள் தண்டனை

 
v

பிரபல தாதாவும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பி ஆன அதிக் அகமது உள்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை எதிர்த்து தீர்ப்பளித்து இருக்கிறது.  பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றம் ஆள் கடத்தல் தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். 

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் எம்பியாக இருந்தவர் அதிக் அகமது.  உத்திரபிரதேசத்தில் இவர் பிரபலமான தாதாவாகவும் வலம் வந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவாக இருந்த ராஜூபால் என்பவர் கொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் அதிக் அகமது கைது செய்யப்பட்டிருந்தார்.   மேலும் இந்த வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் என்பவரை சிறையில் இருந்தபடியே ஆளை வைத்து கடத்தியதாக அதிக் அகமது மீது குற்றம் சாட்டப்பட்டது.

m

 இந்த வழக்கின் விசாரணை பிரயாக்ராஜில் இருக்கும் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   கடந்த பிப்ரவரி மாதம் போலீஸ் காவலில் இருந்து  உமேஷ் பால் கொலை செய்யப்பட்டது குறித்து தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

 இந்த நிலையில் உமேஷ் பால் கடத்தப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.   அதற்காக அவரது கும்பலைச் சேர்ந்த சவுலத் ஹனீப்,  தினேஷ் பஷி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா அபராதமும் விதித்து நீதிபதி தினேஷ் சந்திர சுக்கலா தெரிவித்துள்ளார்.