பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை
பிரல இளம்நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹோட்டல் அறையில் தூக்கில் சடலமாக தொங்கி இருக்கிறார் நடிகை ஆகான்சா துபே.
போஜ்புரி மொழி திரைப்படங்களில் நடித்த வந்த பிரபலமான நடிகை ஆகான்ஷா துபே. 25 வயதான இவர் உத்தரப்பிரதேசத்தில் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கி இருந்திருக்கிறார்.
நேற்று இவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் கொண்ட ஹோட்டல் பணியாளர் அறைக்குச் சென்று பார்த்திருக்கிறார். மாற்று சாவி எடுத்துச் சென்று திறந்து பார்த்திருக்கிறார். அங்கே அறையில் இருந்த மின்விசிறியில் துணியால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி இருக்கிறார் ஆகான்ஷா துபே.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர், நிர்வாகத்திற்கு தகவல் சொல்ல, ஹோட்டல் நிர்வாகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நடிகை ஆகான்ஷா துபே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர் .நடிகை ஆகான்ஷா துபேவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டலில் அவர் தங்கி இருந்த அறைக்கு வேறு யாரேனும் வந்து சென்றார்களா? அன்றைய தினம் யார் யாருடன் பேசினார் என்பது குறித்து அவரது செல்போனிலும் ஆய்வு செய்து வருகின்றனர் போலீசார் .