புனித் ராஜ்குமார் மறைவு : ரசிகர் தூக்கிட்டு தற்கொலை!!

 
ttn

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 46. மறைந்த கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளையமகன் புனித் ராஜ்குமார். இவருக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் இந்த திடீர் மறைவு கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புனித் ராஜ்குமார் மறைவையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன் 144 தடை உத்தரவும் சில பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

puneeth

இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் துயருற்ற ,  ராகுல் என்ற 21 வயது ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புனித் ராஜ்குமார் மறைவையொட்டி அவரது ரசிகர் ராகுல்  வீட்டில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

புனித் ராஜ்குமார் மறைவை தாங்க முடியாமல் ரசிகர் தூக்கிட்டு தற்கொலை

ஏற்கனவே புனித் ராஜ்குமார் மறைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் முனியப்பன் ,பரசுராம்  ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்தனர். புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகரான முனியப்பன் நேற்று அவரது மறைவை அடுத்து தொலைக்காட்சியில் செய்தி பார்த்து அழுதபடி இருந்துள்ளார் .அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.