எந்தவொரு மாநாட்டையும் நடத்த இந்தியா தயார் - ஜி20 சிறப்பு செயலாளர்

 
g20

ஜி20 மாநாட்டை அடுத்து எந்தவொரு மாநாட்டையும் நடத்த இந்தியா தயார் என்பதை நிரூபிக்கும் என ஜி20 மாநாட்டின் சிறப்பு ஜெயலாளர் முகேஷ் பர்டேஷி தெரிவித்துள்ளார். 

இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லியில் இன்று பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்குகிறது.  இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஜி-20 மாநாடு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமான மூலம் இந்தியா வந்தடைந்தார்.   அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங்  வரவேற்றார் .அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஜோ பைடன் சந்தித்து பேசினார். இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது. ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் நிலையில் தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு,  மனிதவளம் போன்றவற்றை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள இது மிகச்சிறந்த நல்வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.

g20

இந்த நிலையில், ஜி20 மாநாட்டை அடுத்து எந்தவொரு மாநாட்டையும் நடத்த இந்தியா தயார் என்பதை நிரூபிக்கும் என ஜி20 மாநாட்டின் சிறப்பு ஜெயலாளர் முகேஷ் பர்டேஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ஜி20 மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து முடித்துள்ளதாக கூறினார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஜி20 மாநாட்டிற்கான வேலைகளை செய்துள்ளதாகவும் கூறினார்.