ஆந்திராவில் 3 நாட்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 
Andhra Rain

புயல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 3 நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிச.3 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பிருக்கிறது. டிச.4ம் தேதி மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில், சென்னைக்கும் மசிலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. 

இந்த நிலையில், புயல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 3 நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் வருகிற 03ம் தேதி, 04ம் தேதி மற்றும் 05ம் தேதி என மூன்று நாட்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.