கர்நாடகாவில் ஹிஜாப் தடை நீக்கம்!!

 
hijab

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வரை தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் , கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டம் வெடித்த நிலையில் . கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

tn

இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் சிலர் மனு தாக்கல் செய்தனர்.கல்வி நிலையங்களில் சீருடை பரிந்துரைக்கப்படுவது அடிப்படை உரிமைகள் மீதான நியாயமான கட்டுப்பாடு ஆகும்; அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது. அதேசமயம் ஹிஜாப் தடைக்கு எதிரான சரியான முகாந்திரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்று கூறி  ஹிஜாப் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

Siddaramaiah

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் உடை என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது; அதை ஏன் எதிர்க்க வேண்டும்? என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பிய நிலையில் உங்கள் விருப்பத்துக்கேற்ப எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.