ஆடு ஈன்ற மனித முக குட்டி.. ஆச்சரியத்தில் அசாம் மக்கள்... வைரலாகும் ஃபோட்டோஸ்..

 
ஆடு குழந்தை


அசாமில் ஆடு ஒன்று மனித உருவத்தில் குட்டி ஈன்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் சாச்சர் மாவட்டம் அருகே உள்ள கங்காபூர் பகுதியில் வசித்து வரும் சங்கர் தாஸ் என்பவர் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அதில் ஒரு ஆடு மனித குழந்தையைப் போன்று குட்டியை ஈன்றுள்ளது.  சினையாக இருந்த அந்த ஆடு வழக்கமான குட்டிகளைப் போன்றே குட்டி போடும் என சங்கர் தாஸ்  எதிர்ப்பார்த்திருந்த நிலையில், அந்த ஆடு அச்சு அசலாக மனித உருவ குட்டியை போட்டிருக்கிறது. கண். மூக்கு, வாய் என அனைத்தும் மனித குழந்தை போலவும், காது, கால் மட்டும் சற்று வித்தியாசமாகவும் இருந்தது.

ஆடு குழந்தை

அதேபோல் ஆட்டுக்குட்டிக்கு இருப்பது போன்று வாலும் இந்தக் குட்டிக்கு இல்லை.. இந்தக் குட்டியின் நிறமும், உருவமும்  வழக்கமான ஆடுகளைப் போன்று இல்லாமல்  மனித உருவத்திலேயே காணப்பட்டது.  ஆனால் இந்தக் குட்டி பிறந்து சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டது.  ஆடு குழந்தை

இந்தக் மனித ஆட்டுக்குட்டி பிறந்தவுடன், அதன் உரிமையாளர் ஏதோ அதிசய பிறவி பிறந்துவிட்டதாக எண்ணினாராம்.. ஆனால்  அது உடனடியாக இறந்துவிடவே அதனை குழி தோண்டி புதைத்துவிட்டாதாக தெரிவித்திருக்கிறார். இந்த மனித உருவ ஆட்டுக்குட்டியின் புகைக்கபடமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.