பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

 
BBC

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் சென்னையிலும் வரிமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை அண்ணாநகரில் உள்ள அசோக் ரெசிடென்சி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தகாக புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம்  ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்படத்தை வெளியிட்டு இருந்த நிலையில், இதற்கு மத்திய அரசு தடை விதித்து இருந்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பிபிசி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்திலும் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.